திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 10ம் நாள் : அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் 10ம் நாளான இன்று திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் காலையிலும் இரவிலும் சுவாமி உலா வந்த நிலையில் 10ம் நாளான இன்று அதிகாலை 3.50 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோவிலின் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் நெய் நிரப்பப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியர்கள் திருக்கோவிலினுள் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில் உள்ள அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கு கொண்டு சென்று பரணி தீபத்தினை ஏற்றினார்.