தமிழகத்தில் விவசாயத்துக்கான இலவச மின் விநியோக நேரம் மாற்றம்

விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சார விநியோக நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இப்புதிய நேர மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

இலவச மின்சாரம் வழங்கும் நேரத்தை மின்வாரியம் மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில் காலை 8.30 முதல் மதியம் 2.30 மணி வரை வழங்கப்படும்.

டெல்டா அல்லாத மாவட்டங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் காலை9 முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், 2-வது பிரிவில் காலை 9.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் மின்விநியோகம் செய்யப்படும். புதிய நேர மாற்றம் நவ.1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.