திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறையின் காரணமாக கடந்த 2 நாட்களில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமி தரிசனம் செய்த வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் தற்போது கூட்டம் கணிசமாக குறைந்துள்ளதால் பக்தர்கள் சிரமம் இன்றி மகிழ்ச்சியாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
