திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 34 இடங்களில் தொடக்கம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சொர்ணவாரி பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 11-ம் தேதி முதல் 34 இடங்களில் தொடங்கப்படுகிறது. வரும் 9-ம் தேதி முதல் முன்பதிவு தொடக்கம். நெல் கொள் முதல் செய்யும் போது தேவையற்ற கால தாமதம் அல்லது பிரச்சினைகள் ஏற்பட்டால் 94 87 26 25 55 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்) 63 85 42 09 76 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.