திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பிரியதர்ஷினி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு முருகேஷ் அவர்கள் பரிசுகளை வழங்கினார். மேலும் தூய்மை பணியாளர்களை கவுரவித்து பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் அனைத்து துறை மகளிர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.