42வது வணிகர் தினம் வரும் மே 5 அன்று மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வணிகர்கள் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (2025 மார்ச் 4ஆம் தேதி) ஹோட்டல் எல்லோராவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் AM விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலசபாக்கம் ரமணன் ஸ்டோர் உரிமையாளர் திரு. ரமணன், தலைவர் திரு.ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு வணிகர்கள் பங்கேற்று, தலைவர் AM விக்கிரமராஜாவை சந்தித்தனர்.


