கார்த்திகை தீப திருவிழா :  பக்தர்கள் இன்றி நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்த விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்த விழா முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

திருக்கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 10ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. தீப திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக பந்தல் அமைத்தல், சுவாமி வீதி உலா வரும் வாகனங்கள் பழுது பார்த்தல் உள்ளிட்ட திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன.