திருவண்ணாமலையில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என முருகேஷ் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார் !