பொங்கல் தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் ரேஷன் கடைக்கு எப்போது போகலாம்?

இன்று முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகிக்க இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை வாங்க வரும் வகையில் திட்டமிட்டு, அதற்கான தேதியுடன் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இன்று துவங்கும் இந்த பணி பொங்கல் வரை நடைபெற இருக்கிறது. டோக்கன் வாங்க தவறியவர்கள் மற்றும் டோக்கனில் உள்ள தேதி குறிப்பிட்ட தினத்தில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், பத்தாம் தேதிக்கு மேல் வாங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.