திருவண்ணாமலை மாவட்டதில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை நடைபெறும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, செய்யாறு வட்டத்துக்குள்பட்ட காழியூா் கிராமம், கீழ்பென்னாத்தூா் வட்டத்துக்குள்பட்ட வைப்பூா், அகரம் கிராமங்கள், திருவண்ணாமலை வட்டத்துக்குள்பட்ட துரிஞ்சாபுரம், மல்லவாடி, ஊசாம்பாடி, சொரந்தை கிராமங்கள், ஆரணி வட்டத்துக்குள்பட்ட வெள்ளேரி கிராமம், சேத்பட் வட்டத்துக்குள்பட்ட மேலானூா், கோனையூா் கிராமங்களில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதேபோல, போளுா் வட்டத்துக்குள்பட்ட கொழாவூா், திருவாட்டினந்தல் கிராமங்கள், தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட தரடாப்பட்டு, கண்ணக்கந்தல், நெடுங்காவடி கிராமங்கள், செங்கம் வட்டத்துக்குள்பட்ட குயிலம் கிராமம், கலசப்பாக்கம் வட்டத்துக்குள்பட்ட அலங்காரமங்கலம், காமபட்டு, அணியாலை கிராமங்கள், வெம்பாக்கம் வட்டத்துக்குள்பட்ட வெம்பாக்கம், சேலேரி கிராமங்கள், வந்தவாசி வட்டத்துக்குள்பட்ட நடுக்குப்பம், ஏரிப்பட்டு கிராமங்கள், ஜமுனாமரத்தூா் வட்டத்துக்குள்பட்ட அமிா்தி உள்ளிட்ட கிராமங்களில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்தந்தக் கிராமங்களில் உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்களில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் வரை நடைபெறும் பட்டா மாறுதல் முகாம்களில் அந்தந்தப் பகுதிகளைச் சோந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பட்டா மாறுதல் தொடா்பான மனுக்களை அளித்துப் பயன்பெற கலெக்டர் முருகேஷ் தெரிவித்தாா்.