திருவண்ணாமலையில் மின்விளக்குளால் ஜொலிக்கும் கோபுரங்கள்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் ஐப்பசி மாதம் 24ம்நாள் (10.11.2021) அன்று கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்குகிறது. வரும் கார்த்திகை மாதம் 3ம்நாள் (19.11.2021)அன்று 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கின்றன.